Friday 3rd of May 2024 04:55:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
நாயாறுப் பகுதியில் பண்ணை உரிமையாளர் ஒருவர் திடீர் மரணம்! முதல் நாள் தடுப்பூசி பெற்றவர்?

நாயாறுப் பகுதியில் பண்ணை உரிமையாளர் ஒருவர் திடீர் மரணம்! முதல் நாள் தடுப்பூசி பெற்றவர்?


முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் நேற்று மாலை பண்ணை உரிமையாளர் ஒருவர் திடீர் மரணம் அடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவைச் சேர்ந்த 65 வயது மதிக்கத் தக்க சுந்தரம் என்ற நபர் நேற்று மாலை தனது பண்ணைப் பகுதியில் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அவருடைய சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கடந்த இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே குறித்த நபர் நேற்று முன்தினம்(உயிரிழப்பதற்கு முதல் நாள்) கொரோனா 02 ஆவது தடுப்பூசியை செம்மலை பாடசாலையில் பெற்றுக்கொண்டவர் என்று நாயாறு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சுந்தரம்,

முல்லைத்தீவில் பல பண்ணைகளை வைத்திருப்பதாகவும் பெறுமதி வாய்ந்த மாடுகள் உட்பட்ட கால்நடைகளை வைத்திருப்பதுடன் பலருக்கு வேலை வாய்ப்புக்களையும் வழங்கி வந்தவர் என்றும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE